ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி நேற்று முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாவே அணி, இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு கோரியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. ராயுடு 124 ரன்களும், பின்னி 77 ரன்களும் எடுத்தனர்.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஜிம்பாவே அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் சிகும்பரா மிக அபாரமாக விளையாடி 104ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் ராயுடு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.