shadow

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா அபார வெற்றி

India v SA 4th Test D5இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரஹானே மற்றும் தொடர் நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய அணி டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் 334 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு டிக்ளேரும் செய்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 121 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்களும் எடுத்து 337 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 49.1 ஓவர்கள் பந்துவீசி வெறும் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களையும், யாதவ் 3 விக்கெட்டுக்களையும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளனர்.

English Summary: India won by 337 runs against South Africa

Leave a Reply