shadow

ஒருநாள் தொடரை அடுத்து டி-20 தொடரையும் வென்றது இந்தியா

CRICKET-T20-ZIM-INDஇந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் தற்போது டி-20 தொடரிலும் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.

பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக இந்திய அணியின் ஜாதவ் மற்றும் தொடர் நாயகனாக ஸ்ரீரான் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply