shadow

5-0 என்ற கணக்கில் முழுதாக கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஐந்து ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஐந்திலும் வெற்றி பெற்று முழு வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் இலங்கை அணி பரிதாபமான நிலையில் உள்ளது.

நேற்றைய 5வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 238 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 110 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த விராத் கோஹ்லி வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய புவனேஷ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. மேலும் பூம்ராவுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்துள்ளது.

Leave a Reply