shadow

186 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அரையிறுதிக்கு தகுதி பெற்றது

இங்கிலாந்து நாட்டில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய முக்கிய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் ராஜ் 109 ரன்கள் எடுத்தார்.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Leave a Reply