shadow

CRICKET-BAN-INDஇந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றிபெற்றது.

ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி மிர்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நேற்று பொறுப்பாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேச அணி 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்

இந்தியா        317/6     50 ஓவர்கள்

தவான்        75
தோனி        69
ராயுடு        44
சுரேஷ் ரெய்னா    38

வங்கதேசம்    240/10    47 ஓவர்கள்

சபீர் ரஹ்மான்    43
சவும்யா சர்கார்    40
லிட்டன் தாஸ்    34
முசாபர் ரஹிம்    24

ஆட்டநாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகனாக முசாபர் ரஹ்மானும் தேர்வு செய்யப்பட்டனர். நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தபோதிலும் 2-1 என்ற விகிதத்தில் வங்கதேச அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply