இந்தியாவுக்கு ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாட சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது.
நேற்று ராஞ்சி நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது.
மாத்யூஸ் 139 ரன்களும், திராமனெ 52 ரன்களும் எடுத்தனர். இந்திய தரபில் குல்கர்னி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணி முதல் ஐந்து ஓவர்களில் 2 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தலும் ராயுடு-விராத்கோஹ்லி பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்தது. இறுதியில் 48.4 ஓவர்களில் இந்திய அணி 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விராத்கோஹ்லி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும், ராயுடு 59 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருதை மாத்யூஸும் தொடர்நாயகன் விருதை விராத் கோஹ்லியும் பெற்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.