shadow

ஒட்டுமொத்த பாகிஸ்தானையே எங்களால் அழிக்க முடியும். இந்திய ராணுவ தளபதி பதிலடி

indiadankநேற்று பாகிஸ்தானை சேர்ந்த அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான், டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை தங்களிடம் இருப்பதாக அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்டிய நிலையில் அவரது பேச்சு இந்திய ராணுவத்தின் தரப்பை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பாதுகாப்பு படைகளின் முன்னாள் அதிகாரிகள் மூலம் இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் கருத்து தெரிவித்தபோது ‘அப்துல் காதிர்கானின் பேச்சு மிகவும் முதிர்ச்சி இல்லாத, வழக்கத்தில் இல்லாத ஒன்றாக உள்ளது. அணு ஏவுகணைகள், போர் ஆயுதங்கள் அல்ல. அவை தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஒட்டு மொத்த பாகிஸ்தானையே தாக்கும் அளவுக்கு இந்தியாவிடம் வல்லமை இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி நாங்கள் பேசுவது இல்லை” என்று கூறினார்.

பாகிஸ்தான் அணு விஞ்ஞானியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி குர்மீத் கன்வால், முன்னாள் கடற்படை அதிகாரி மன்மோகன் பகதூர், முன்னாள் விமானப்படை அதிகாரி உதய்பாஸ்கர் ஆகியோர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply