மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. விராத்கோஹ்லி சதம்
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆண்டிகுவா மைதானத்தில் தொடங்கப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் 7 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும் பின்னர் களமிறங்கிய விராத்கோஹ்லி பொறுப்புடன் ஆடி மேற்கிந்திய தீவுகளில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தவான் 84 ரன்களும், புஜாரே 16 ரன்களும், ரஹானே மற்றும் அஸ்வின் தலா 22 ரன்களும் எடுத்துள்ளனர். 90 ஓவர்களில் இந்திய அணி 4 விகெட்டுக்கள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.