shadow

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த நிலையில் அதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 272 ரன்கள் எடுத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்க இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தாமதப்பட்டது.

இதனை அடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக போட்டி நடுவர்கள் தெரிவித்துள்ளனர்

இதனால் இன்று ஒருநாள் ஆட்டம் வேஸ்ட் என ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்,.