shadow

தொடர் மழை காரணமாக இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி டிரா
India v SA 2nd Test D3
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த 14ஆம் தேதி பெங்களூர் மைதானத்தில் ஆரம்பமான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி டிரா ஆனதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

இந்த போட்டி முதல் நாள் ஆட்டம் மட்டுமே நடந்தது. முதல் நாளில் தென்னாப்பிரிக்க அணி 214 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 80 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தபோது முதல் ஆட்டம் முடிவு பெற்றது.

இதன்பின்னர் 2வது நாள் முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், இன்று இந்த போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.

இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் வரும் 25ஆம் தேதி தொடங்கும்.

Leave a Reply