இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி: விராத் கோஹ்லி நிதான ஆட்டம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி 130 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
முன்னதாக தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 335 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் விராத்கோஹ்லி மற்றும் பாண்டியா ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.