இந்தியா தென் ஆப்பிரிக்க அணியுடன் இன்று முதல் ஒருநாள் போட்டியை விளையாடவுள்ளது. இன்றைய ஆட்டம் பகலிரவு ஆட்டம். மாலை 5 மணிக்கு போட்டி துவங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு ஒருநாள் தொடரை இதுவரை வென்றதில்லை. 2010- 11 தொடரில் 2- 3 என்று இந்தியா தோற்றது.

அதில் ஒரு போட்டியில் யூசுப் பத்தான் அதிரடி சதம் எடுத்து ஜெயிக்க முடியாத நிலையிலிருந்து வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். ஆனால் அதையும் தோற்றோம். இதனால் அந்த ஒருநாள் தொடரை இழக்க நேரிட்டது.

தென் ஆப்பிரிக்க அணியும் தோல்வி முகத்தில்தான் இருக்கிறது. கடந்த 11 மாதங்களில் அந்த அணி தங்கள் சொந்த மண்ணில் நியூசீலாந்து, மற்றும் சமீபமாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடர்களை இழந்துள்ளது. இது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புதான்.

அனைத்து நாடுகளிலும்… இருதரப்பு ஒருநாள் தொடரை வென்றுள்ள தோனி தலைமை இந்தியா தென் ஆப்பிரிக்காவிலும் வென்று மேலும் ஒரு சாதனையை படைக்குமா என்பதை பொறுத்திருந்துபார்க்கவேண்டும்.

இரண்டாவது போட்டி டர்பனில் 8ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

கடிசி ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் 11ஆம் தேதி பகலிரவு ஆட்டமாக மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply