ஜொகான்னஸ்பர்கில் நடைபெறும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்காவை தோனி முதலில் பேட் செய்ய அழைத்தார் அந்த அணி 50 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 358 ரன்கள் குவித்தது.

40வது ஓவரிலேயே 223/2 என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா, அதன் பிறகு 10 ஓவர்களில் 135 ரன்கள். அதுவும் கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள்.

தென் ஆப்ரிக்கா வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் அவுட் ஆனார்கள். இறுதியில் இந்திய அணி 41 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Leave a Reply