shadow

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமான வெற்றியை பெற்ற நிலையில் நேற்று பெங்களூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது., ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் தவிர ஏனைய பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை கொடுத்ததால் 189 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. ராகுல் 205 பந்தில் 9 பவுண்டர்களுடன் 90 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியவின் லியோன் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 40 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழக்காமல் உள்ளது. இன்றைய இரண்டாவது நாளில் விக்கெட்டுக்கள் விழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply