இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆறாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியது. நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.

அஷ்வின் கூறுகையில், “இரண்டு போட்டிகள் மழையால் ரத்தானதால் ரசிகர்களும், வீரர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடரை கைப்பற்ற வெற்றியை நோக்கி இந்திய அணி களமிறங்கினாலும், வீரர்கள் யாருக்கும் எந்த நெருக்கடியும் இல்லை. சவால்களை ரசித்து சமாளிப்போம்,” என்றார்.

போட்டி நடக்கும் நாக்பூரில் மழைபெய்ய வாய்ப்பு இல்லை என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply