இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று மெல்பொர்ன் நகரில் ஆரம்பமானது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 142.3 ஓவர்களில் 530 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்மித் 192 ரன்களும், ஹாரீஸ் 74 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரபில் ஷமி 4 விக்கெட்டுக்களும், யாதவ் மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்
இதனை அடுத்து இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 55 ரன்களுடனும், புஜாரா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தவான் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.