இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 183 ரன்களில் சுருண்டது இலங்கை
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் அஸ்வினின் அபாரமான சுழல்பந்து வீச்சால் அந்த அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆனால் இலங்கை அணியும் அபாரமாக பந்து வீசியதால் இந்திய பேட்ஸ்மேன்கள் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை எடுத்து தடுமாறி வருகின்றனர். தவான் 9 ரன்களுடனும், விராத் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணியின் பிரசாத் மற்றும் மாத்யூஸ் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.