shadow

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. அஸ்வின், ஜடேஜா அபாரம்
CRICKET-SRI-IND
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 214 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாட தொடங்கிய இந்திய அணி 22 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 28 ரன்களுடனும், தவன் 45 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக தென்னாப்பிரிக்காவின் 4 விக்கெட்டுக்களை தனது அபாரமான சுழற்பந்துகளால் தமிழக வீரர் அஸ்வின் வீழ்த்தினார். மேலும் அதேபோல் ஜடேஜாவும் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆரோன் ஒரு விக்கெட்டையும், ஒரு விக்கெட் ரன் அவுட் முறையிலும் வீழ்த்தப்பட்டது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 85 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.

English Summary: Spinners bowl hapless South Africa out for 214

Leave a Reply