இந்தியா இலங்கை இடையே சுரங்கப்பாதை. அமைச்சர் நிதின்கட்காரி தகவல்
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே கடல் பாதை மற்றும் சுரங்கப்பாதை ஆகியவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது கூறியுள்ளார்.,
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, ‘இந்தியாவின் தென்கோடி நகரமான ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு, ரூ.24,000 கோடி திட்டமதிப்பில் கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்கவுள்ளதாகவும் இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது, அவருடன் இந்தத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்ததாகவும், இலங்கை மட்டுமின்றி அண்டை நாடுகளான வங்கதேசம், பூடான், நேபாளம், ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் எதிர்கால திட்டம் இருக்கும் என்றும் நிதின்கட்காரி கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.