வெற்றியை நோக்கி இந்தியா! தோல்வியை தவிர்க்க இலங்கை போராட்டம்
இலங்கையில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இருப்பினும் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 4விக்கெட்டுக்களுக்கு 240 ரன்களும் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இரண்டாவது இன்னிங்சில் 550 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் வரை இலங்கை 5 விக்கெட்டுக்களை இழந்து 234 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னா 94 ரன்கள் எடுத்து தனியொருவராக போராடி வருகிறார். இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இலங்கை அணி தோல்வியை தவிர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பொம்
Leave a Reply
You must be logged in to post a comment.