2வது டி-20 கிரிக்கெட். தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி
கடந்த சில வாரங்களாக மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆனால் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் ஒரே ஒரு ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியா நடைபெற்ற 2வது டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்தது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்ற இந்தியாவுக்கு மழை வடிவில் வில்லன் வந்தது., 2ஓவர்களில் இந்தியா 15 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த தொடரை மேற்கிந்திய தீவு 1-0 என்ற கணக்கில் வென்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.