shadow

தொடரை இழந்தது இந்தியா. வங்கதேசம் அபார வெற்றி
CRICKET-BAN-IND
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி வெற்றி வங்கதேச கிரிக்கெட் அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் ஆறு இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்திய முசாபர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் முதல் ஒருநாள் போட்டியிலும் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ரோஹித் சர்மா. பின்னர் தவான் 53 ரன்களிலும், கோஹ்லி 23 ரன்களிலும், தோனி 47 ரன்களிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுக்க அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் பிரகாசிக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணி 45 ஓவர்களுக்கு 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்கதேச அணி, 38 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி வெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Leave a Reply