shadow

2வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி

cricketநியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று  டெல்லியில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 242 ரன்கள் அடித்தது. கேப்டன் வில்லியம்சன் மிக அபாரமாக விளையாடி 118 ரன்கள் எடுத்தார்.

243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி 49.3 ஓவர்களில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கேப்டன் தோனி 39 ரன்களும் , ஜாதவ் 41 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகனாக வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. இரு அணிகளுக்கான அடுத்த போட்டி மொகாலியில் வரும் 23ஆம் தேதி நடைபெறும்.

Leave a Reply