shadow

இந்திய சுழற்பந்தில் 79 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா

Ravindra Jadejaஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இன்று காலை 11 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

ஆனால் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்க அணி 79 ரன்களில் ஆட்டமிழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். மிஷ்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை சற்று முன்னர் தொடங்கியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply