shadow

விறுவிறுப்பான கட்டத்தில் 3வது டெஸ்ட் போட்டி. இந்தியா தொடரை வெல்லுமா?

CRICKET-SRI-INDஇந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருப்பதால் இந்த போட்டியின் முடிவு தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி, இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டதால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 100.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 312 ரன்கள் எடுத்தது. புஜாரே 145 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, இந்திய பவுலர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் 111 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. ஆனால் புஜாரே, ராகுல், ரஹானே ஆகியோர் முதல் ஆறு ஓவர்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால், இந்தியா 6 ஓவர்களில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. இதன்பின்னர் விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா விளையாடியபோது மழை குறுக்கிட்டதால் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்றும் நாளையும் மீதமிருக்கும் நிலையில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரையும் வெல்லும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply