இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி, தவான் அதிரடி சதம்
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, நேற்று முதல் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீரர் அஸ்வினின் அதிரடி பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாத இலங்கை அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
இதன்பின்னர் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய அணி முதலில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இருப்பினும் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் தவான் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியது. விராத் கோஹ்லி 103 ரன்களும், தவான் 134 ரன்களும் எடுத்தனர். தற்போது 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்து 121 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது ஹர்பஜன்சிங் மற்றும் சாஹா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இன்னும் இந்த போட்டி மூன்று நாட்கள் மீதமிருக்கும் நிலையில் இந்த போட்டியின் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.