shadow

விறுவிறுப்பான கட்டத்தில் 3வது டெஸ்ட்: 241 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 247 ரன்களும் எடுத்துள்ளது. அதேபோல் முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்துள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி பெற 241 ரன்கள் தேவை என்ற இலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய 3வது நாள் ஆட்டமுடிவில் தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணி வெற்றி பெற 224 ரன்கள் எடுக்க வேண்டும். அதேபோல் இந்திய அணி வெற்றி பெற 9 விக்கெட்டுக்கள் எடுக்க வேண்டும். எனவே இன்று ஆட்டத்தின் முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply