shadow

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி. சதமடித்து அசத்திய விராத்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற்று வரும் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சற்று முன்வரை 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 366 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே முரளிவிஜய் சதமடித்து அசத்திய நிலையில் தற்போது விராத்கோஹ்லியும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த போட்டி டிராவை நோக்கி செல்லுமா? அல்லது இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply