ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 173 ரன்கள் அடித்தது. ஜடேஜா மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய இந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 174 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 83 ரன்களும் தவான் 40 ரன்களும் தோனி 33 ரன்களும் எடுத்தனர்.
அதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் வென்றது. ஆப்கானிஸ்தான் கொடுத்த 256 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இமாம் உல் ஹக் 80 ரன்கள் குவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.