shadow

cricketநேற்று நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோதவுள்ளது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெற்றி பெற 214 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 33.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் 65 ரன்களும், வாட்சன் 64 ரன்களும், மாக்ஸ்வெல் 44 ரன்களும் எடுத்தனர். 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆஸ்திரெலிய பந்துவீச்சாளர் ஹாசல்வுட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் வரும் 26ஆம் தேதி அரையிறுதி ஆட்டத்தை சிட்னியில் சந்திக்க உள்ளன.

Leave a Reply