shadow

இந்திய அணியின் மோசமான ஆட்டம். 105 ரன்களில் சுருண்டது

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்தியா, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களுக்கு சுருண்டது.

முன்னதாக ஆஸ்திரேலியா 260 ரன்கள் எடுத்துள்ள நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா தற்போது 155 ரன்கள் பின் தங்கியுள்ளது. 104 இன்னிங்ஸ்களுக்கு பின்னர் விராத் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி வீரர்களான புஜாரா, கோஹ்லி, அஸ்வின், சஹா, ஜடேஜா, யாடவ், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்கங்களிலும் பூஜ்யத்திலும் தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

Leave a Reply