shadow

cricket 1உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்திய அணி 300 ரன்களை மீண்டும் கடந்து சாதனை படைத்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது.

ரோஹித் சர்மா 137 ரன்களும், சுரேஷ்ரெய்னா 65 ரன்களும் எடுத்தனர். தவான் 30 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 23ரன்களும், எடுத்தனர்.

வங்கதேச அணியின் தரப்பில் டாஸ்கின் அஹமத் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply