shadow

இந்தியா-மேற்கிந்திய தீவு 3வது டெஸ்ட்: அஸ்வின் அபாரம்

Ravichandran Ashwinஇந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட்டில் வெற்றி பெற்றும், ஒரு டெஸ்ட்டில் டிராவும் இந்திய அணி செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் தொடக்க ஆட்டக்காரர் தவான் தலா 3 மற்றும் 1 ரன்னில் ஆட்டமிழந்து தவித்து வந்த நிலையில் ராகுல் மற்றும் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அஸ்வின் 75 ரன்களுடனும், சாஹா 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, முதல் நாள் இறுதியில் இந்திய அணி 90 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply