shadow

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா 221/7. புஜாரே சதம்

cricketஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று மழை காரணமாக 15 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி அடுத்தடுத்து கோஹ்லி, ரோஹித் சர்மா, பின்னி, ஓஜா, அஸ்வின் ஆகியோர்களின் விக்கெட்டுக்களை சொற்ப ரன்களுக்கு இழந்தது. ஆயினும் இன்னொரு பக்கத்தில் புஜாரா நிலைத்து ஆடி சதமடித்தார். அவர் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

சற்று முன் வரை இந்தியா 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியாததால் இந்த ஆட்டம் டிராவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply