shadow

cricketஇந்திய அணி ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டி ஹராரே நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாவே அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. ரஹானே தலைமையிலான இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றது.

இன்றைய போட்டியில் ஜிம்பாவே பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். கேப்டன் ரஹானே 34 ரன்களிலும், முரளி விஜய் ஒரு ரன்னிலும், திவாரி 2 ரன்னிலும், உத்தப்பா ரன் ஏதும் எடுக்காமலும், ஜாதவ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராயுடு மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து 80 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கின்றார். அவருக்கு இணையாக விளையாடி வரும் பின்னி 31 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஜிம்பாவே தரப்பில் சிபபா 2 விக்கெட்டுக்களையும், டிரிபானோ மற்றும் விட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் விழுந்துள்ளது.

இந்திய அணி சற்று முன் வரை 38.4 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply