ஜூலை மாதம் 31ஆம் தேதி வருமான வரி கட்டவேண்டிய கடைசி நாள் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருமான வரி அலுவலகம் செயல்படும் என்றும் அன்றைய தினங்களிலும், வருமான வரியை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், தமிழகம் முழுவதும் தேவைப்படும் இடங்களில் வருமான வரித்துறை அலுவலகத்தின் சார்பில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படும். இந்த சிறப்புக்கவுண்டர்கள் இம்மாதம் 26, 27, 28, 30, 31 ஆகிய 5 நாட்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உரிய நேரத்தில், செளகரியமாக தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அபராதத்தையும், மேல் நடவடிக்கைகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.