shadow

உ.பி. உள்பட 5 மாநில தேர்தல் தேதி. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
இதன்படி உத்தரப்பிரதேசத்தில் மார்ச் 27ஆம் தேதியும், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் மார்ச் 18ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

உ.பியில் பிப்.11, பிப்.15, பிப் .19, பிப்.23, பிப்.27, மார்ச்.4, மார்ச்.8 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அதேபோல் மணிப்பூரில் மார்ச்-4 மற்றும் மார்ச் -8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 16 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

Leave a Reply