shadow

trichy airportதிருச்சி விமான நிலைய கழிவறையில் கவனிப்பாரற்று இருந்த ஒரு மர்ம பார்சல் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம  பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 3 கிலோ தங்க கட்டிகள் இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் விமான நிலையத்தின் மையப்பகுதியில் உள்ள கழிவறையில் சில மர்ம பார்சல்கள் இருந்ததாக சில பயணிகள் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

உடனடியாக கழிவரையை நோக்கி விரைந்து சென்ற விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கழிவரையில் இருந்த பார்சல்களை கைப்பற்றி அதனை சோதனை போட்டபோது அதில் தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

கழிவறையில் இருந்த 3 பார்சல்களிலும் 3 கிலோ தங்கபிஸ்கட்டுகள் இருந்ததாகவும், அவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் எனவும் சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் சோதனைக்குப் பயந்து கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை கழிவறையில் வீசிச் சென்றிருக்கலாம் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply