shadow

admk

தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் 40 பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளர் ஆகிய 41 பேர்களையும் சென்னை தி.நகரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பொதுமக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிமுகப்படுத்தி நேற்று பேசினார்.

உண்மை ஒளிக்கும், பொய் இருளுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து உண்மை ஒளிர உதவி செய்யவேண்டும் என்று அவர் வாக்க்காளர்களை கேட்டுக்கொண்டார்.

தமிழகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்றுத்தர அதிமுகவினால் மட்டும் முடியும். இதுவரை வஞ்சிக்கப்பட்டு வந்த தமிழகம், உரிமையை பெற எழுச்சி பெற வேண்டிய நேரம் இது.

மத்தியில் மக்காளாட்சி மலர்வது மட்டும் முக்கியம் அல்ல. அது அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக இருந்தால்தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி நதிநீர் பிரச்சினை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லை. எனவே இந்த பிரச்சனைகள் முழுமையாக தீர மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி தேவை.

எனவே 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சென்னை தி.நகரில் நேற்று ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply