shadow

2மும்பையில் நடிகை இலியானா மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால் பாலிவுட் மற்றும் டோலிவுட் படவுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கேடி என்ற தமிழ்ப்படம் மூலம் அறிமுகமான நடிகை இலியானா தெலுங்கில் பல ஆண்டுகளாக நம்பர் 2 நடிகையாக வலம் வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் இவர் விஜய்யுடன் நடித்த “நண்பன்” படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.

மும்பையில் நேற்று Mein Tera Hero என்ற படத்தின் புரமோஷனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற காரின் நம்பர் பிளேட் போலியானது என தெரிய வந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் சிறு விசாரணைக்கு பின்னர் அவர் ரிலீஸ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கை காரணமாக பாலிவுட் மற்றும் டோலிவுட் படவுலகம் சிலமணி நேரங்கள் பரபரப்புடன் காணப்பட்டது. அவர் ரிலீஸ் ஆனது தெரிந்தவுடன் தான் அனைவரும் நிம்மதி ஆனார்கள்.

Leave a Reply