மகாராஷ்ட்ரா மற்றும் நாக்பூரில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) விரைவில் தொடங்கப்படும் என்று மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
2015 புத்தாண்டை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசாக மகாராஷ்ட்ரா மற்றும் நாக்பூரில் ஐஐஎம் கல்வி நிறுவனம் தொடங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.
மேலும், மூத்த கல்வியாளர்களின் ஆலோசனைபடி ஐஐஎம், விஸ்வேஸ்வராய நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வளாகத்தில் முன்னதாக தொடங்கப்படும். இதற்காக வாடகைக்கு இரண்டு கட்டிடங்கள் என மாதத்திற்கு ரூ.6 லட்சம் செலவில் செயல்பாட்டை துவங்க உள்ளது. இது விமான நிலையம் அருகே மிஹன் என்ற வளாகத்தில் தொடங்குவதாக திட்டமிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.