shadow

மக்கள் போராடி கொண்டே இருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: ரஜினிகாந்த்

தூத்துகுடியில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய நடிகா் ரஜினிகாந்த் இன்று மாலை சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘.போராட்டம் போராட்டம் என்று சென்று கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று ஆவேசமாக கூறினார்.

ரஜினிகாந்த் தூத்துகுடியில் பேட்டியளித்தபோது சமூக விரோதிகளால் தான் இந்த போராட்டம் கலவரமாக மாறியது என்று கூறினார். அதற்கு சமூக விரோதிகள் என்றால் யார் என்று ரஜினிகாந்த் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒருசில அரசியல் தலைவா்கள் விளக்கம் கேட்டிருந்தனா். இது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மத்தியல் சமூக விரோதிகள் தான் ஊடுருவி பிரச்சினைகளை ஏற்படுத்தினா்.

சமூக விரோதிகள் காவல்துறையினரை தாக்கிய பின்புதான் பிரச்சினை ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள், மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது இறுதி நாளில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் போராட்டம் கலவரமாக மாறியது. அதே போன்று தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனா்.

சமூக விரோதிகள் தான் காவல் துறையினரை தாக்கினா், சமூக விரோதிகள் தான் ஆட்சியா் அலுவலகத்தை தாக்கினா், அவா்கள் தான் குடியிருப்புகளுக்கு தீ வைத்தனா்.

சீருடையில் உள்ள காவல் துறையினரை தாக்கினால் அதை வன்மையாக கண்டிப்பேன். போராட்டம், போராட்டம் என்று சென்று கொண்டு இருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்தார்.

Leave a Reply