shadow

சாந்தன் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சீமான்

santhanராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ள சாந்தன் திடீரென கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய குடும்பம் இலங்கையில் உள்ளதால் தன்னை இலங்கை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் சாந்தன் இந்த கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். ஆனால் இந்த மனு குறித்து கருத்து கூறியுள்ள நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘சாந்தனின் கோரிக்கை ஏற்கப்படும் என்று தான் நம்பவில்லை என்று கூறியுள்ளதாக தொலைக்காட்சி செய்தி கூறியுள்ளது.

இந்த கோரிக்கை மனு மீது மத்திய மாநில அரசுகள் எந்தவிதமான நடவடிக்கை என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சாந்தனின் கோரிக்கை ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்

Leave a Reply