shadow

noballகிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஒருநாள் போட்டியை இன்னும் சுவாரசியப்படுத்த ஐ.சி.சி ஒருசில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகளின் ஒருபடியாக பவர்ப்ளே நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் பின்பற்றப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

1. 41 முதல் 50 ஓவர் வரையில் வெளிவட்டத்தில்  5 வீரர்களை நிறுத்த அனுமதி

2. ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அனைத்து வித நோபாலுக்கும் பிரீஹிட்

3. ஒருநாள் போட்டிகளின் போது முதல் 10 ஓவர்களில் வழங்கப்பட்ட பேட்டிங் பவர் பிளே ரத்து

கடந்த மே மாதம் மும்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய விதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Leave a Reply