ஊழல் குற்றச்சாட்டு. ஐஏஎஸ் அதிகாரியின் குடும்பமே தற்கொலை
கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வந்த பி.கே. பன்சால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொள்ள ரூ.9 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பி.கே.பன்சால் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த அவருடைய மனைவி சத்யபாலா (வயது 58), மற்றும் மகள் (வயது 27) ஆகியோர் கடந்த ஜுலை 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று ஐஏஎஸ் அதிகாரி பி.கே. பன்சால் மற்றும் அவரது மகனும் தற்கொலை செய்துகொண்டனர். ஊழல் வழக்கில் சிக்கியதால் ஏற்பட்ட பெரும் அவமானத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது அவருடைய உறவினர்களுக்கு என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.