shadow

modi tea stall

என்னை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து, சிறையில் அடைத்தால் அங்கும் தேநீர் விற்பேன் என பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசினார்.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் நேற்று பிரச்சாரம் செய்த மோடி, “ராகுல்காந்திக்கு கண்ணியம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. என்னை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறர். லோக் ஆயுக்தா மூலம் என்னை சிறைக்கு அனுப்புவேன் என ராகுல்காந்தி பேசியுள்ளார். அப்படியே என்னை சிறையில் அடைத்தாலும், சிறையிலும் டீ விற்பேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் ராகுல்காந்தியின் கோமாளித்தனமான பேச்சை கேட்கும்போது தொலைக்காட்சியில் பார்க்கும் காமெடி காட்சியை பார்ப்பதுபோன்ற திருப்தி ஏற்படுகிறது. தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் கபில்சர்மாவின் காமெடி நைட் என்ற காமெடி நிகழ்ச்சி ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் நிறுத்த வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.

Leave a Reply