shadow

திமுகவுக்கு எனது ஆதரவு உண்டு: தினகரன்

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று இன்று தனி ஒருவராக சட்டமன்றத்திற்குள் சென்றுள்ள டிடிவி தினகரன், சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன் என்று கூறியுள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் கவர்னர் உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினகரன் பின்னர் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த அரசு மாற வேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான் போராடுகிறேன். எனவே திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் நான் ஆதரிப்பேன். பொங்கலுக்குப் பிறகு எனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நல்ல தீர்ப்பு வந்துவிடும். அப்போது திமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் நாங்கள் ஆதரிப்போம். நானும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ தான். திமுக வெளிநடப்பு செய்தால் நானும் செய்ய வேண்டிய அவசியமில்லை’ என்று கூறினார்

Leave a Reply