shadow

telunganaசிங்கப்பூரைப்போல் தெலங்கானா மாநிலத்தை மாற்றுவேன்  என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

கடந்த வாரம் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் செய்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று தெலுங்கானா திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “மிகச்சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூர் பல இன்னல்களை கடந்து இன்று உலகமே நிமிர்ந்து பார்க்கும் வண்ணம் உயர்ந்துள்ளது. அந்நாட்டின் உயர்வுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யெவ் அவர்களின் திறமையான ஆட்சியே காரணம்.

சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் பல அரிய விஷயங்களை புரிந்து கொண்டேன். அனைத்து துறைகளிலும் சிங்கப்பூர் வளர்ந்திருப்பதன் காரணத்தை தெரிந்து கொண்டு வந்துள்ளேன். அதே பாணியின் செயல்பட்டு மிக விரைவில் தெலுங்கானாவை சிங்கப்பூர் போல மாற்றிக்காட்டுவேன்.

என்னை போலவே தெலுங்கானா எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் ஒருமுறை சிங்கப்பூர் சென்று வந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக திட்டமிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினர்.

Leave a Reply