எனது ஆதரவாளர்களின் உயிரையும், என்னுடைய உயிரையும் எனது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என பீகார் முதல்வர் ஜிதன்ராம் மான்ஜி திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,”பீகார் சட்டமன்ற மரபை சபாநாயகர் பின்பற்றவில்லை. அவரது நடுநிலைமையை நான் சந்தேகிக்கிறேன்.
எனக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள்., அமைச்சர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.
எனக்கு ஆதரவு தெரிவிக்க 140 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருந்தனர். அவர்களுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்தது. எனது ஆதரவாளர்கள் நலனுக்காகவே நான் ராஜினாமா செய்தேன்.
இப்போதுகூட எனக்கு நம்பிக்கை இருக்கிறது பேரவையில் பெரும்பான்மையை என்னால் நிரூபித்திருக்க முடியும் என்று. பீகார் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தல் நடத்துவதே ஒரே தீர்வாகும்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.